Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் வீரசைவ திருமடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில துணைச்செயலாளர் பாலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி நகராட்சி ஒன்றியம் பேரூராட்சி ஆகிய பகுதியில் வைக்கக்கூடிய விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் விநாயகர் ஊர்வலம் வைப்பது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல்துறை விதிக்கின்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் புதிய சிலை வைப்பதற்கு எந்த ஒரு நிபந்தனையுமின்றி அனுமதி அளிக்க வேண்டும்.
விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்திய பாலகங்காதர திலகருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு வழங்கி கௌரவிக்க வேண்டும். திருபுவனத்தில் இந்தான்டு இறந்துபோன மதமாற்ற எதிர்ப்பு போராளி ராமலிங்கத்தின் தம்பி கலியமூர்த்தி (இ.ம.க.மா.பொதுசெயலாளர்) தலைமையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து இந்து விழிப்புனர்வு ஊர்வலம் நடத்துவது என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.